Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேனி: ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியினர் பணம் பதுக்கி வைத்திருந்ததாக சோதனை நடத்த சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் இன்று நிருபர்களிடம் பேசுகையில்; வருமானவரி துறையினர் திட்டமிட்டு நடத்தும் சதி. துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கட்டுப்பாட்டில் உள்ள போலீசாரின் ஆட்டம் நடக்கிறது. அதிமுக வும், தேர்தல் ஆணையமும் இணைந்து நாடகம் நடத்துகிறது. பணம் எனது கட்சிக்காரர் வீட்டில் இருந்து கைப்பற்றப்படவில்லை.
அதிமுக அலுவலகத்தில் நாங்கள் பணத்தை வைப்போமா? அதிமுக பிரமுகர் அமரேஷ் கட்டடத்தில் பணத்தை வைக்க நாங்கள் முட்டாளா ? தோல்வி பயம் காரணமாத்தான் சோதனை நடக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கு பாதிப்பு இல்லை. சாதகமாகத்தான் அமையும்.
எந்த வழக்கு பதிந்தாலும் சந்திக்க தயார். தொகுதி முழுவதும் பார்லி., தொகுதிக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம், சட்டசபை தொகுதிக்கு ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் வழங்கியுள்ளனர். பணம் கொடுத்த ஆதாரம் எங்களிடம் உள்ளது. இவர்களை போலீசார் கைது செய்ய தயாரா ? இவ்வாறு தங்க தமிழ்செல்வன் கூறினார்.